இறந்தவர்கள் என்ற துண்டுப்பிரதியை துவாலு தீவில் ஒரு சகோதரர் கொடுக்கிறார்
இப்படிப் பேசலாம்
இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)
கேள்வி: உலகம் முழுசும் இருக்குற நல்ல ஜனங்க நிறைய பேர், இறந்தவங்கள கௌரவப்படுத்துறதுக்காக வருஷாவருஷம் அவங்களுக்கு அஞ்சலி செலுத்துறாங்க. இறந்துபோனவங்கள மறுபடியும் பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா?
வசனம்: அப் 24:15
பிரசுரம்: இறந்தவங்க மறுபடியும் உயிரோட வருவாங்கனு இந்த துண்டுப்பிரதியில சொல்லியிருக்கு. [முடிந்தால், இறந்தவர்கள் உயிரோடு வருவார்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
கேள்வி: கடவுள்மேல நாம எப்படி அன்பு காட்டலாம்?
வசனம்: 1யோ 5:3
உண்மை: கடவுளோட கட்டளைகளுக்கு கீழ்ப்படியறது மூலமா அன்பு காட்டலாம்.
இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35)
கேள்வி: சில ஆமைகள் 150 வருஷங்கள் உயிர்வாழுது, சில மரங்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களா இருக்கு. ஆனா மனுஷங்க வெறும் 70 இல்லனா 80 வருஷங்கள்தான் உயிரோட இருக்காங்க. இதுக்கு என்ன காரணம்னு யோசிச்சு பார்த்திருக்கீங்களா?
வசனம்: ஆதி 3:17-19
பிரசுரம்: இறந்தவங்க உயிரோட வரப்போறத பத்தி இந்த துண்டுப்பிரதி விளக்குது.
நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
இப்படிப் பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களைப் பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படிப் பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்துத் தயாரியுங்கள்