வெளி ஊழிய சிறப்பம்சங்கள்
மார்ச் 2013
நினைவு ஆசரிப்பு காலத்தில் நாம் செய்த சிறப்பு ஊழியத்தை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இயேசுவின் நினைவுநாளுக்கு இந்த வருடம் 1,08,467 பேர் வந்திருந்தார்கள். மார்ச் மாதத்தில் ஊழியத்தின் பல அம்சங்களில் புதிய உச்சநிலையை எட்டினோம். 4,161 ஒழுங்கான பயனியர்கள் உட்பட மொத்தம் 37,248 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தார்கள். 50,347 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன.