அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், பழுப்பேறிய அல்லது 1995-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவதொரு 192 பக்க புத்தகத்தை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: கையிருப்பிலுள்ள பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் எதையாவது கொடுங்கள்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, விழிப்புடன் இருங்கள்! “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, நம்முடைய பிரச்சினைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
பைபிள்—ஒரு கண்ணோட்டம் —அஸ்ஸாமீஸ்
உவாட்ச்டவர் லைப்ரரி—2009 பதிப்பு
உவாட்ச்டவர் லைப்ரரி—2009 பதிப்பு, சபையில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்; சபை மூலமாகவே அதைப் பெற முடியும் என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள்.