அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கலாம். சபைக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளாமல், நினைவு ஆசரிப்புக்கும் விசேஷ பொதுப் பேச்சுக்கும் மட்டுமே வந்திருந்த ஆர்வமுள்ள புதியவர்களை மீண்டும் சந்திப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கப்படும். அவர்களில் யாருக்காவது பைபிள் படிப்பு நடத்தப்படவில்லை என்றால், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து, ஒரு படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் அவர்களைச் சந்திக்க வேண்டும். ஜூன்: கடவுளைத் தேடி அல்லது பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்) புத்தகத்தை அளியுங்கள். சபையின் கையிருப்பில் இந்தப் புத்தகங்கள் இல்லையென்றால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தைக் கொடுக்கலாம்.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்—சிறியது —ஆங்கிலம்