சரித்திரத்திலேயே மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி
அந்த நிகழ்ச்சிதான் இயேசு கிறிஸ்துவின் மரணம். ஏன் அப்படி?
ஒரு மனிதன் கடவுளுக்குப் பரிபூரண உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும் என்பதை நிரூபித்தது, இப்படியாக அது கடவுளுடைய நீதியை மெய்ப்பித்துக் காட்டியது.
அது ஒரு பூமிக்குரிய பரதீசில் நித்திய ஜீவனை அடைவதற்கான எதிர்பார்ப்பை மனிதனுக்குத் திறந்தது.
இயேசு மரிப்பதற்கு முன்பு, அவர்தாமே தம்முடைய மரணத்தின் ஞாபகார்த்தத்தை நிறுவினார். அது ஓர் எளிய ஆசரிப்பாக இருந்தது. அந்த ஆசரிப்பின் போது, இயேசு தம்முடைய சீஷர்களிடம், “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்,” என்று சொன்னார்.—லூக்கா 22:19, 20.
நீங்கள் நினைவுகூருவீர்களா?
சரித்திரத்திலேயே மிக முக்கியமான நிகழ்ச்சியை ஆசரிப்பதில் தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படியாக யெகோவாவின் சாட்சிகள் உங்களை அழைக்கிறார்கள். இந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி செவ்வாய்க்கிழமை சூரிய மறைவுக்குப் பின்னர் நடைபெறும். சரியான நேரத்தையும் இடத்தையும் தெரிந்துகொள்ள உள்ளூர் ராஜ்ய மன்றத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளுங்கள். காணிக்கை வசூலிப்பு இருக்காது, வருகை தருவோர் போதனை மிகுந்த ஒரு பேச்சைக் கேட்கவும் ஆசரிப்பின் எளிமையான நிகழ்ச்சியைக் கவனிக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.