முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்புகள் ஆரம்பிக்க உற்சாகப்படுத்துங்கள்
மே 2011 முதற்கொண்டு ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும்படி பிரஸ்தாபிகள் உற்சாகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அதற்காக, “பைபிள் தரும் பதில்கள்” என்ற கட்டுரை காவற்கோபுர பொது இதழில் தவறாமல் வெளிவருகிறது. ஆகவே, முதல் சனிக்கிழமையில் நடக்கும் வெளி ஊழியக் கூட்டத்தில், எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையைப் பயன்படுத்தி சிறப்பித்துக் காட்ட வேண்டும். ஒரு நடிப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதல் சனிக்கிழமையில் வெளி ஊழியத் தொகுதிகள் தனித்தனியாகக் கூடிவர மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம்; அல்லது எல்லாத் தொகுதிகளும் ஒரே இடத்தில், ஒருவேளை ராஜ்ய மன்றத்தில், கூடிவர ஏற்பாடு செய்யலாம். என்றாலும், பல சபைகள் ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்தினால் வெளி ஊழியக் கூட்டத்தை ஒன்றாக நடத்துவதற்காக இந்த விசேஷ தினத்தை இன்னொரு நாளுக்கு எந்தச் சபையும் ஒத்திவைக்கக் கூடாது.