பக்கம் இரண்டு
“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” —அப். 5:29.
இயேசு தமது மரணத்திற்கு சற்று முன்பு, சீஷர்களிடம் இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” (மத். 24:9) கிறிஸ்தவம் பிறந்த சமயத்திலிருந்தே, இந்த வார்த்தைகள் நிறைவேறி வந்திருக்கின்றன. நற்செய்தியைப் பரப்புவதை எண்ணற்ற அரசாங்கங்கள் நிறுத்துவதற்கு முயற்சி செய்திருக்கின்றன, ஆனால் அவை தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன, ஏனென்றால் உண்மையுள்ள தமது ஜனங்களை யெகோவா ஆசீர்வதித்துக் காப்பாற்றுகிறார். (சங். 97:10) ஆகவே, 2006-ம் ஆண்டுக்குரிய வருடாந்தர வசனத்தை மனதில் ஆழமாகப் பதிய வைத்திருப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! மனிதருடைய பல வகையான எதிர்ப்புகளின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகள் தேவனுக்கே கீழ்ப்படிகிறார்கள் என்பதை இப்புத்தகத்தின் பக்கங்களிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். அவர்களுடைய முன்மாதிரியை எப்பொழுதும் பின்பற்ற இவை உங்களை ஊக்கமூட்டி பலப்படுத்துவதாக.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Pages 6 and 12: Globe on brochure covers: Used with permission from The George F. Cram Company, Indianapolis, Indiana