பைபிள் உதாரணம்
ஒபதியா போல் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
பொல்லாத ஆகாப் ராஜாவின் அரண்மனை அதிகாரியாக இருந்தவர் ஒபதியா. பாகால் வணக்கம் இஸ்ரவேல் தேசம் முழுக்க பரவுவதற்கு ஆகாப் ராஜா விட்டுவைத்திருந்தார். ஆனால் ஒபதியா, “சின்ன வயதிலிருந்தே” யெகோவாமேல் பயபக்தியை வளர்த்திருந்தார். (1 ரா. 18:1-13) அதனால், யெகோவாவின் தீர்க்கதரிசிகளைக் கொல்ல, யேசபேல் ராணி கட்டளை போட்டபோது, தைரியமாகச் செயலில் இறங்கினார். வெறும் ஒரு தீர்க்கதரிசியை ஒளித்து வைப்பதே நடக்காத காரியமாக இருந்த சூழ்நிலையில், ஒபதியா 100 தீர்க்கதரிசிகளை ஒளித்து வைத்தார். கடுமையான பஞ்சம் இருந்த சமயத்தில்கூட அவர்களுக்கு உணவு கொடுத்துவந்தார். ராஜாவும் ராணியும் ஆட்டிவைக்கும் பொம்மைகளாக இருந்த நூற்றுக்கணக்கான பொய்த் தீர்க்கதரிசிகளின் கண்ணில்படாமல் இப்படி ஒரு செயலைச் செய்ய ஒபதியாவுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்!—1 ரா. 18:19.
நமக்கு என்ன பாடம்? ஆகாப் ராஜாவை நினைத்து ஒபதியா பயந்தார்தான். ஆனால், அந்தப் பயத்தைவிட கடவுள்பயம் அவருக்கு ரொம்ப அதிகமாக இருந்தது. சகோதரர்களுக்காக உயிரையே பணயம் வைக்க அதுதான் அவருக்குப் பலம் தந்தது. நாம் வாழ்கிற இடத்தில் உண்மை வணக்கத்துக்குத் தடை இருந்தால், நாமும் கடவுள்பயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். சோதனைகளைச் சந்திக்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்குத் தேவையான பலத்தை கடவுள்பயம் நமக்குத் தரும்.