பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 40-41
யெகோவா யோசேப்பை விடுவிக்கிறார்
யெகோவா விடுவிக்கும்வரை, யோசேப்பு ஓர் அடிமையாகவும் பிறகு ஒரு சிறைக்கைதியாகவும் கிட்டத்தட்ட 13 வருஷங்கள் கஷ்டப்பட்டார். அந்தக் காலப்பகுதியில் வெறுப்பையும் மனக்கசப்பையும் தீனி போட்டு வளர்ப்பதற்குப் பதிலாக, யோசேப்பு நிறைய நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டார். (சங் 105:17-19) யெகோவா அவரைக் கைவிடவே இல்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. யோசேப்பு அவருடைய சூழ்நிலையை எப்படி நன்றாகப் பயன்படுத்தினார்?
அவர் கடினமாக உழைத்தார், நம்பகமானவராக இருந்தார். அதனால், யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.—ஆதி 39:21, 22
தன்னை அநியாயமாக நடத்தியவர்களை எப்படிப் பழிவாங்குவது என்று யோசிப்பதற்குப் பதிலாக, மற்றவர்கள்மேல் அக்கறை காட்டினார்.—ஆதி 40:5-7
என்னுடைய பிரச்சினைகளைச் சகித்திருப்பதற்கு யோசேப்புடைய உதாரணம் எனக்கு எப்படி உதவி செய்கிறது?
அர்மகெதோனில் யெகோவா என்னை விடுவிக்கும்வரை என் சூழ்நிலையை நான் எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?