பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 15-17
ஆபிராமுக்கும் சாராய்க்கும் யெகோவா பெயரை மாற்றினார்—ஏன்?
யெகோவாவின் பார்வையில் ஆபிராம் குற்றமற்றவராக இருந்தார். தான் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கூடுதலான விவரங்களை ஆபிரகாமிடம் சொன்னபோது, யெகோவா தீர்க்கதரிசன அர்த்தமுள்ள பெயர்களை ஆபிராமுக்கும் சாராய்க்கும் வைத்தார்.
அந்தப் பெயர்களுக்கு ஏற்றது போலவே, ஆபிரகாம் நிறைய தேசங்களுக்குத் தகப்பனாக ஆனார், சாராள் ராஜாக்களுக்கு மூதாதையாக ஆனாள்.
ஆபிரகாம்
திரளான ஜனங்களுக்குத் தகப்பன்
சாராள்
இளவரசி
பிறக்கும்போது நமக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் ஆபிரகாம்-சாராளைப் போல நமக்கென்று ஒரு நல்ல பெயர் எடுக்க முடியும். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
‘யெகோவாவோட பார்வைல குற்றமற்றவனா இருக்க நான் என்ன செய்யணும்?’
‘யெகோவாகிட்ட இப்போ எனக்கு நல்ல பேரு இருக்கா?’