பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 27-28
பவுல் ரோமுக்குக் கப்பலில் போகிறார்
ஒரு கைதியாக இருந்தபோதிலும் பவுல் நல்ல செய்தியை அறிவிப்பதை நிறுத்தவே இல்லை. கப்பலில் பயணம் செய்தபோது, கப்பலோட்டிகளிடமும், தன்னோடு பயணம் செய்தவர்களிடமும் நல்ல செய்தியை அறிவித்தார். மெலித்தா தீவில் கப்பல் சேதமடைந்த பிறகு, தான் குணமாக்கிய எல்லாரிடமும் சாட்சி கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ரோமுக்கு வந்து சேர்ந்து மூன்று நாட்கள் கழித்து, முக்கியமான யூத ஆண்களை வரச்சொல்லி அவர்களிடம் சாட்சி கொடுத்தார். வீட்டுக் காவலிலிருந்த இரண்டு வருஷங்களும், அவரைச் சந்திக்க வந்த எல்லாரிடமும் பிரசங்கித்தார்.
கஷ்டமான சூழ்நிலையிலும் நல்ல செய்தியை அறிவிக்க நீங்கள் என்ன செய்யலாம்?