அறிவிப்புகள்
◼ பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? ஆகிய புத்தகங்களில் ஒன்றை அளியுங்கள். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விடாமுயற்சி செய்யுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.
◼ 2009-ல் நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் கொடுக்கப்படும் விசேஷப் பொதுப் பேச்சின் தலைப்பு: “எல்லா மதங்களையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?” இது சம்பந்தமான அறிவிப்புக்கு, டிசம்பர் 2008 நம் ராஜ்ய ஊழியத்தைப் பார்க்கவும்.
◼ நினைவுநாள் அனுசரிப்பு அழைப்பிதழ்களுக்காகச் சபைகள் அனுப்பிய ஆர்டர்கள் கிளை அலுவலகத்திற்கு வந்துசேரவில்லையென்றால், சபையின் முக்கிய மொழியில் பிரஸ்தாபிகளுக்குத் தலா 25 அழைப்பிதழ்களும், பயனியர்களுக்குத் தலா 75 அழைப்பிதழ்களும் அனுப்பி வைக்கப்படும்.