உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/00 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
  • இதே தகவல்
  • சபையின் சமாதானத்தையும் பரிசுத்தத்தையும் கட்டிக்காப்பது
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
  • யெகோவாவின் சிட்சையை எப்போதும் ஏற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • யெகோவாவின் இரக்கத்தைப் பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • படுமோசமான பாவத்தை ஒருவர் செய்யும்போது சபை எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 2/00 பக். 7

கேள்விப் பெட்டி

◼ ஒருவர் திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட்டது பற்றிய அறிவிப்பு செய்யப்படும்போது கைத்தட்டுவது சரியா?

யெகோவா தேவன் தம்முடைய அன்புள்ள தயவின் காரணமாக ஓர் அருமையான ஏற்பாடு செய்திருக்கிறார். அதுவே, பாவம் செய்து மனந்திரும்பியவர்கள் திரும்பவும் அவருடைய தயவிற்குள் வருவதற்கும் கிறிஸ்தவ சபைக்குள் திரும்ப சேர்க்கப்படுவதற்குமான வேதப்பூர்வ ஏற்பாடு. (சங். 51:12, 17) இவ்வாறு, உண்மையிலேயே மனந்திரும்பியவர்கள் திரும்ப சேர்க்கப்படும்போது நாம் அவர்கள் மீது அன்புகூருவதை உறுதிப்படுத்தும்படி பைபிள் நமக்கு ஆலோசனை கொடுக்கிறது.—2 கொ. 2:6-8.

ஓர் உறவினரோ நண்பரோ திரும்ப சேர்க்கப்படும்போது நாம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம் என்பது உண்மையே. இருப்பினும் அந்த நபர் திரும்ப சேர்க்கப்படுவது பற்றி சபையில் அறிவிப்பு செய்யப்படும்போது கண்ணியத்தோடு அமைதியாய் இருப்பதே பொருத்தமானது. இதைப் பற்றி அக்டோபர் 1, 1998, காவற்கோபுரம், பக்கம் 17 இவ்வாறு கூறியது: “சபையிலுள்ள பெரும்பாலானோருக்கு ஏன் ஒரு நபர் சபைநீக்கம் செய்யப்பட்டார் என்றோ, ஏன் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றோ தெரியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கூடுதலாக, மனந்திரும்பிய நபர் செய்திருந்த தவறால் சிலர் தனிப்பட்ட விதமாக பாதிக்கப்பட்டோ புண்படுத்தப்பட்டோ இருக்கலாம்; ஒருவேளை நீண்ட காலத்துக்குக்கூட அதன் பாதிப்பு இருக்கலாம். அத்தகைய விஷயங்களில் சிலருக்கு உள்ள மனநிலை புரிந்துகொள்ளத்தக்கதே; தனிப்பட்ட விதமாக, அவர்களை வரவேற்றாலொழிய ஒருவர் திரும்ப சேர்த்துக் கொள்ளப்பட்டதைக் குறித்து அறிவிப்பு செய்யப்படும்போது, அவரை வரவேற்பது கடினமாக இருக்கும்.”

ஒருவர் சத்தியத்திற்கு திரும்பி வரும்போது நாம் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறோம். என்றாலும், அவர் திரும்ப சேர்த்துக்கொள்ளப்படும்போது கைத்தட்டுவது பொருத்தமாய் இருக்காது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்