பொருளடக்கம்
3 தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்—மடகாஸ்கரில்
பிப்ரவரி 26, 2018-மார்ச் 4, 2018
7 “சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்”
பிரச்சினைகளை சமாளிப்பது நமக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும்? இந்தக் கட்டுரையில், 2018-க்கான வருடாந்தர வசனத்தைப் பற்றிப் பார்ப்போம். யெகோவா தரும் பலம் நமக்கு ஏன் தேவை என்பதைப் பற்றியும், அவர் அதை நமக்கு எப்படிக் கொடுப்பார் என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்வோம்.
மார்ச் 5-11, 2018
12 நினைவுநாள் நிகழ்ச்சியும் அருமையான ஒற்றுமையும்
இந்த வருஷம் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சி மார்ச் 31, 2018, சனிக்கிழமை அன்று நடக்கும். அதற்காக நாம் இப்போது எப்படித் தயாராகலாம்? அதில் கலந்துகொள்வதால் நாம் எப்படி நன்மை அடைவோம்? அந்த வருடாந்தர நிகழ்ச்சி, உலகம் முழுவதும் இருக்கிற கடவுளுடைய மக்களை எப்படி ஒன்றுபடுத்துகிறது? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
மார்ச் 12-18, 2018
17 எல்லாவற்றுக்குமே சொந்தக்காரராக இருப்பவருக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்?
நம்மிடம் இருக்கும் எல்லாமே யெகோவா கொடுத்ததுதான். ஆனாலும், அவற்றைக் கொடுத்து அவருடைய வேலையை ஆதரிக்கும் வாய்ப்பை அவர் நமக்குத் தருகிறார். ஏன்? நம்முடைய மதிப்புமிக்க பொருள்களைக் கொடுத்து அவரை மகிமைப்படுத்தும்போது எப்படி நன்மை அடைவோம்? இதற்கான பதில்களை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
மார்ச் 19-25, 2018
22 எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்?
மார்ச் 26, 2018-ஏப்ரல் 1, 2018
27 மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்
இந்த “கடைசி நாட்களில்” சர்வசாதாரணமாக இருக்கும் சுயநலமான அன்பினால் அல்ல, கடவுள்மேல் இருக்கும் அன்பினால்தான் உண்மையான சந்தோஷம் கிடைக்கும் என்பதை முதல் கட்டுரை விளக்கும். (2 தீ. 3:1) இன்றுள்ள பெரும்பாலான மக்களிலிருந்து கடவுளுடைய மக்கள் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை இரண்டாவது கட்டுரை விளக்கும்.