நினைவுகூரவேண்டிய ஓர் இரவு
எளிய முறைகொண்ட ஓர் ஆசரிப்பின்போது மனிதவர்க்கத்திற்காக தான் செலுத்தவிருந்த பலியைக் குறிப்பிட்டு காண்பிக்கும் வகையில் இயேசு கிறிஸ்து திராட்ச ரசத்தையும் புளிப்பில்லா அப்பத்தையும் அடையாளமாகப் பயன்படுத்தினர்.
இந்த ஆசரிப்பை ஆரம்பித்து வைக்கும்போது, அவர் “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்,” என்று சொன்னார்.
அவருடைய மரண ஞாபகார்த்தமாக யெகோவாவின் சாட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேஷ கூட்டங்களுக்குக் கடந்த வருடம் 81,60,597 பேர் கூடிவந்ததன் மூலம் இயேசுவை நினைவுகூர்ந்தனர். இந்த வருடமுங்கூட உங்களுடைய வீட்டிற்கு அருகாமையிலிருக்கும் ராஜ்ய மன்றத்தில் நடைபெறவிருக்கும் ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வருகை தருமாறு நீங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள். இது ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12-ம் தேதி சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு நடைபெறும், நிகழ்ச்சியின் சரியான நேரத்தைத் தெரிந்துகொள்ள உங்கள் பிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள்.