பக்கம் இரண்டு
மக்கள் பூமியின் தூய்மையை கெடுக்கப்பட்டு வருவதைக் குறித்து நிச்சயமாகவே அதிக உணர்வுள்ளவர்களாகி வருகிறார்கள். விஞ்ஞானிகள் இதன் விளைவுகளைக் குறித்து எச்சரிக்கிறார்கள். அமில மழை வனங்களையும் மீன்களையும் அழிப்பது, மருந்து தெளிப்பான்கள் ஓசோன் அடுக்கில் துளைப்போடுவது, நச்சுத்தன்மையுள்ள வேதியல் பொருட்கள் மண்ணுக்கு நஞ்சூட்டுவது, கழிவுப்பொருட்கள் வீசியெறிவதாலும் சமுத்திரம் சேதமடைவது புதைப்படிவ எரிபொருள் பூமியை உஷ்ண வீடாக மாற்றுவது—இந்த விஷயத்தின் பேரில் எழுதப்படும் புத்தகங்கள் பல, செய்யப்பட்டிருக்கும் சேதமனைத்தையும் ஆதாரமூலமாக எண்பிக்கத் தவறிவிட்டிருக்கின்றனர். பெரும்பாலான மக்கள். தூய்மைக் கேட்டின் மூலக்காரணம்—ஒழுக்கங்களின் சீர்குலைவே என்பதை அறியாதிருக்கிறார்கள். இது முன்னதாகச் சம்பவித்திருக்கிறது. “தேசம் அதன் மக்களின் பாவங்களுக்காக அவதியுறுகிறது. பூமி சத்துவமற்றுப் போகிறது, பயிர் உலர்ந்து போகிறது, வானங்கள் மழையைப் பொழிய மறுக்கிறது. தேசம் குற்றச்செயலில் மூலமாய் தீட்டுப்பட்டது; ஜனங்கள் கடவுளின் நியாயப்பிரமாணங்களை முறித்துவிட்டிருக்கிறார்கள்.”—ஏசாயா 24:4.5, தி லிவ்விங் பைபிள்.