உங்கள் தலை வலிக்கும்போது
வலியைப் போக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? சிலருக்கு மாத்திரையைப் போல நன்றாகவே வேலை செய்யும் ஒரு தலைவலி நிவாரணி ஐஸ் கட்டி ஆகும் அண்மையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின்படி, நீண்ட காலமாகவே காய்ச்சள்களுக்கும் சுளுக்குகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் ஐஸ் தலைவலியைப் போக்கவும் கூடும். ஒற்றைத் தலைவலி உட்படக் கடுமையான தலைவலியினால் அவதியுற்ற 90 நோயாளிகளில், ஐஸ் கட்டியைப் பயன்படுத்தியபோது 71 சதவிகிதத்தினருக்கு நிவாரணம் கிடைத்தது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் உடனடியாகவே வலி குறைந்ததை உணர்ந்தார்கள். இது ஏன் பயனுள்ளதாக இருக்கிறது?
“இரத்தக்குழாய்கள் விரிவடைவதாலோ அல்லது சுருங்குவதாலோ தலைவலி உண்டாகிறது” என்று விளக்குகிறார் சிக்காகோவில் தலைவலி மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் சே மோர் டையமண்ட், “உறைந்த நீர் இந்தக் குழாய்களைச் சுருங்கச் செய்துவிடுகிறது.” நொறுக்கிய ஐஸ் கட்டிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு 30-45 நிமிடங்களுக்கு உட்கார்ந்தபடியோ படுத்துக்கொண்டோ உங்கள் நெற்றியின் மீது ஒத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்கிறார். ஐஸ் கட்டிக்கு மரத்துப்போகச் செய்யும் தன்மை இருப்பதால் உடனடியாக ஓரளவு நிவாரணம் கிடைக்கிறது. (g87 9/22