அடிக்குறிப்பு
a பூமிக்குரிய சீயோன் மலை ஒருசமயம் எபூசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இஸ்ரவேலை ஆண்ட தாவீது ராஜா அதை தன் தலைநகரமாக்குவதற்கு எபூசியர்களிடமிருந்து கைப்பற்றினார். (2 சாமுவேல் 5:6, 7, 9) அதுமட்டுமல்ல பரிசுத்த உடன்படிக்கைப் பெட்டியையும் இந்தத் தலைநகருக்கு கொண்டுவந்தார். (2 சாமுவேல் 6:17) அந்தப் பெட்டி யெகோவாவின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தியதால் சீயோன் மலை கடவுளுடைய இருப்பிடமென குறிப்பிடப்பட்டது. இவ்வாறு அது பரலோகத்திற்குப் பொருத்தமான அடையாளமாக இருந்தது.—யாத்திராகமம் 25:22; லேவியராகமம் 16:2; சங்கீதம் 9:11; வெளிப்படுத்துதல் 11:19.