அடிக்குறிப்பு
c அவர்களுடைய இனத் தொகுதி, கிரேக்க செல்வாக்கை எதிர்த்துப்போராடும்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழும்பின ஹஸிதிம் என்ற தொகுதியிலிருந்து பரம்பரையாக வந்தது. “உண்மைப்பற்றுறுதியுள்ளவர்கள்” அல்லது “பக்திமான்கள்” என அர்த்தப்படுத்தும் கஸிதிம் என்ற எபிரெயச் சொல்லிலிருந்து இந்த ஹஸிதிம்கள் தங்கள் பெயரை ஏற்றார்கள். யெகோவாவின் ‘உண்மைப்பற்றுறுதியுள்ளவர்களைக்’ குறிப்பிடும் வேதவசனங்கள் ஏதோ விசேஷித்த முறையில் தங்களுக்குப் பொருந்தினதென்று அவர்கள் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். (சங்கீதம் 50:5) இவர்களும், இவர்களுக்குப் பின் பரிசேயர்களும், நியாயப்பிரமாணத்தின் ஒவ்வொரு எழுத்தையும் விடாப்பிடியாய் எதிர்த்துப் போராடுவோராகத் தங்களைத் தாங்களே நியமித்துக்கொண்டவர்கள்.