உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 60
  • மரண பயத்தை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரண பயத்தை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • யெகோவாவுக்குப் பயப்படுவதற்கேற்ற இருதயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • யெகோவாவுக்கான பயத்தில் மகிழ்ச்சி காண கற்றுக்கொள்வது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • மனிதனுக்கு அல்ல, கடவுளுக்கு ஏன் பயப்படவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • யெகோவாவுக்குப் பயந்து அவருடைய பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 60

மரண பயத்தை நீங்கள் எப்படி மேற்கொள்ளலாம்?

பைபிள் தரும் பதில்

மரணம் என்கிற எதிரியைக் கண்டு நாம் பயப்படுவதால், நம்முடைய உயிரைப் பாதுகாக்க நியாயமான படிகளை எடுக்கிறோம். (1 கொரிந்தியர் 15:26) ஆனால், பொய்களின் அடிப்படையில் அல்லது மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்படுகிற தேவையில்லாத மரண பயம் மக்களை ‘வாழ்நாள் முழுவதும் அடிமைப்பட்டிருக்க’ செய்கிறது. (எபிரெயர் 2:15) மரணத்தைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்டால், வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க முடியாதபடி தடுக்கிற... நம்மை நடுநடுங்க வைக்கிற... மரண பயத்திலிருந்து நாம் விடுதலையாவோம்!—யோவான் 8:32.

மரணத்தைப் பற்றிய உண்மை

  • இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது, எந்த உணர்வும் கிடையாது. (சங்கீதம் 146:4) இறந்த பிறகு வேதனையையும் சித்திரவதையையும் அனுபவிக்க வேண்டியிருக்கமோ என்று நினைத்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை; ஏனென்றால், மரணத்தைத் தூக்கத்தோடு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது.—சங்கீதம் 13:3, அடிக்குறிப்பு; யோவான் 11:11-14.

  • இறந்தவர்களால் நமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. ஒரு காலத்தில் பயங்கர எதிரிகளாக இருந்தவர்கள்கூட இப்போது ‘செத்துச் செயலிழந்து கிடக்கிறார்கள்.’ (நீதிமொழிகள் 21:16, அடிக்குறிப்பு) ‘அவர்கள் காட்டிய வெறுப்பும், பொறாமையும் ஏற்கெனவே அழிந்துவிட்டன’ என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:6.

  • நம்முடைய வாழ்க்கைக்கு மரணம் ஒரு முற்றுப்புள்ளி என நாம் நினைக்கத் தேவையில்லை. இறந்துபோனவர்களைக் கடவுள் திரும்ப உயிரோடு கொண்டுவரப்போகிறார், ஆம் அவர்களை உயிர்த்தெழுப்பப்போகிறார்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.

  • “இனிமேல் மரணம் இருக்காது” என்று கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:4) அப்படிப்பட்ட காலத்தைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.” ஆம், மரண பயமே இல்லாமல் என்றென்றும் வாழ்வார்கள்!—சங்கீதம் 37:29.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்