சின்னஞ்சிறுசு பெரிய மனசு!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி 43 டாலரைச் சேமித்து வைத்திருந்தாள். அதை 18 டாலராகவும் 25 டாலராகவும் பிரித்து, 18 டாலரைச் சபைச் செலவுகளுக்காக ராஜ்யமன்ற நன்கொடைப் பெட்டியில் போட்டாள். 25 டாலரை யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தாள். கூடவே இந்தக் குட்டிக் கடிதத்தையும் எழுதி அனுப்பினாள்: “இந்தப் பணத்தை உலகம் முழுவதும் நடக்கிற வேலைக்காக அனுப்பி வைக்கிறேன். பிரசங்க வேலையில் நிறையச் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். யெகோவாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்; அதனால் இதைக் கொடுக்கிறேன்.”
பிரசங்க வேலையில் முடிந்தளவு ஈடுபட வேண்டும் என்பதை இந்தப் பிஞ்சு மனசில் அவளுடைய பெற்றோர் பதிய வைத்திருக்கிறார்கள். ‘அவளுடைய பொருளால் . . . யெகோவாவைக் கனம்பண்ண’ வேண்டுமென்றும் அவர்கள் கற்பித்திருக்கிறார்கள். (நீதி. 3:9) இந்தச் சின்னஞ்சிறு பெண்ணைப் போலவே நாமும் உள்நாட்டிலும் சரி உலகெங்கிலும் சரி, கடவுளுடைய வேலையை பக்திவைராக்கியத்தோடு ஆதரிப்போமாக!