நினைவுகூர வேண்டிய நாள்
இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில், அப்போஸ்தலருக்கு புளிப்பில்லா அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் கொடுத்து, அதை சாப்பிடவும் அருந்தவும் சொன்னார். “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றும் அவர்களிடம் கூறினார்.—லூக்கா 22:19.
வருடத்திற்கு ஒரு முறை ஆசரிக்கப்படும் இந்த நிகழ்ச்சி இந்த வருடத்தில் ஏப்ரல் 1, வியாழக்கிழமை வருகிறது. இது சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு ஆசரிக்கப்படும். உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்த விசேஷ நாளின் இரவில் ஒன்றுகூடி, இயேசு கட்டளையிட்ட விதமாக இந்த நினைவு ஆசரிப்பை அனுசரிப்பார்கள். எங்களோடு சேர்ந்துகொள்ளும்படி உங்களை மிகவும் அன்புடன் அழைக்கிறோம். இந்த விசேஷ நிகழ்ச்சி நடைபெறும் சரியான இடத்தையும் நேரத்தையும் தெரிந்துகொள்ள தயவுசெய்து உள்ளூர் யெகொவாவின் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளவும்.