பாடல் 25
கடவுளுடைய விசேஷ சொத்து
1. தேவனின் நெஞ்சை வென்ற
தேவ மகன்கள்தானே,
உலகாள வந்தார்கள்
உலகைதான் வென்றே!
(பல்லவி)
இம்மண்ணில் உம் சொந்தம்
இவர்கள் விசேஷமே!
தம் ஸ்வாசம் போல் எண்ணி,
உம் வான் புகழை சொல்லும் தேசம்.
2. தேவனின் வார்த்தை கொண்டு,
பொய்யைக் களைந்தார்களே.
நிலவைப்போல் நின்றார்கள்,
இருளைதான் வென்றே!
(பல்லவி)
இம்மண்ணில் உம் சொந்தம்
இவர்கள் விசேஷமே!
தம் ஸ்வாசம் போல் எண்ணி,
உம் வான் புகழை சொல்லும் தேசம்.
3. ஆடுகள் எங்கே என்று,
தேடும் பணி செய்தார்கள்.
எஜமான் பின் சென்றார்கள்,
நிழல் போல இங்கே!
(பல்லவி)
இம்மண்ணில் உம் சொந்தம்
இவர்கள் விசேஷமே!
தம் ஸ்வாசம் போல் எண்ணி,
உம் வான் புகழை சொல்லும் தேசம்.
(பாருங்கள்: ஏசா. 43:20அ, 21; மல். 3:17; கொலோ. 1:13)