பகுதி 2—முன்னுரை
அன்றைக்கு இருந்த உலகத்தை அழிக்க யெகோவா ஏன் ஒரு பெரிய வெள்ளத்தை வர வைத்தார்? மனிதர்கள் படைக்கப்பட்டு கொஞ்ச காலத்திலேயே, யெகோவாவுக்கு எதிரான ஒரு கலகத்தை சாத்தான் ஆரம்பித்தான். ஆதாம், ஏவாள், அவர்களுடைய மகன் காயீன் போன்ற ஆட்கள் சாத்தானின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். ஆபேல், நோவா போன்றவர்கள் யெகோவாவின் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். நிறைய பேர் கெட்டவர்களாக இருந்ததால் யெகோவா அன்றைக்கு இருந்த கெட்டவர்கள் எல்லாரையும் அழித்தார். நாம் யார் பக்கம் இருக்கிறோம் என்பதை யெகோவா பார்க்கிறார். யெகோவா கெட்டவர்களை ஜெயிக்க விடவே மாட்டார். இந்த விஷயங்களைப் பற்றி இந்தப் பகுதியில் நாம் தெரிந்துகொள்ளலாம்.