பக்கம் இரண்டு
“அவர்கள் பரதேசிக் கூட்டங்களாய்ச் சுற்றித்திரிகிறார்கள், கட்டிடக் குழாய்களில், எலிகள் குடிகொள்ளும் பாழடைந்த கட்டிடங்களின் அடிநிலக்கிடங்குகளில் அல்லது தெரு முனைக் குவியல்களில் பரிதாபமாகத் தூங்குகிறார்கள். கிழிந்த செய்தித்தாள்களே அவர்களுடைய படுக்கை, கந்தல் உடைகளே அவர்களுடைய ஆடைகள், நேர்மையற்ற வழியில் பணம் சம்பாதிப்பதிலும், விபசாரத்திலும், சிறு சிறு குற்றச்செயல்களைச் செய்வதிலுமே அவர்களுடைய நாட்களை கழிக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவரையும் வழியில் செல்வோரையும் கொள்ளையடிக்கிறார்கள்.” அவர்கள் யார்? லத்தீன்-அமெரிக்க மாநகர் ஒன்றில் குடியிருக்கும் தெருப் பிள்ளைகள், என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஆனால் அவர்கள் உலகின் எந்த ஒரு மாநகரிலும் காணப்படும் வீடு இல்லாத இளைஞராக இருக்கக்கூடும். அவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை பதிவை உண்டுபண்ணும் அளவுக்கு உயர்ந்துகொண்டிருக்கிறது.