பக்கம் இரண்டு
“புகைபிடிக்கலாமா, புகைபிடிக்கக்கூடாத என்பதுதான் கேள்வி. இதை வழக்கமா நீங்கள் வாலிபபருவத்தில் எதிர்ப்படலாம். அதில் கட்டாயம் என்ற காரியம் உட்பட்டில்லை. இது தன்னிஷ்டத்தின்படி எடுக்கப்படும் தீர்மானமாகும். ஆனால் மருத்துவ அதிகாரிகளின் படி, இந்தத் தீர்மானம் உங்களுடைய வாழ்க்கையில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். இது நீங்கள் எப்பொழுது, எவ்வாறு இறப்பீர்கள் என்பதைக்கூட தீர்மானிக்கக்கூடும். ஆகையால் முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன: புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வது நெறிமுறையானதாகுமா? கிறிஸ்தவ நாடுகள் என தங்களை அழைத்துக்கொள்பவை தங்களது புகையிழைப்பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மற்ற நாடுகளில் அவற்றை இறக்குவது ஒழுக்க ரீதியில் நியாயமாகுமா? சிகரெட் விற்பனையாளர் நோயையும் மரணத்தையும் விற்பனைசெய்கிறார்களா? மக்கள் புகைபிடிப்பதைத் தெரிந்துகொள்வதால், இது உண்மையிலேயே முக்கியமான காரியமா?