பக்கம் இரண்டு
அந்தப் படுகொலை—அந்தவார்த்தை 1933 முதல் 1945 வரையாக ஜெர்மனியில் ஹிட்லரின்நாசி ஆட்சியின் கீழ் யூதர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதன் நினைவுகளை மனதிற்குக் கொண்டுவருகிறது. ஆனால் அது பல கேள்விகளையும் எழுப்புகிறது:
அது உண்மையிலேயே நடந்ததா?
அந்தப் படுகொலை யூதருக்கு மட்டுமே ஏற்பட்ட ஓர் அழிவாகக் கருதப்படவேண்டுமா?
இந்தப் பொருளை மறுபடியும் ஏன் சிந்தனைக்குக் கொண்டுவர வேண்டும், அதுவும் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பு?
ஹிட்லரின் கொள்கைகளுக்கு மனச்சாட்சியின் அடிப்படையில் மறுப்பு தெரிவித்த எவரேனும் இருந்தனரா?
அந்தப் படுகொலை நடக்கும்படி கடவுள் ஏன் அனுமதித்தார்?
படுகொலை செய்யப்பட்ட அல்லது அந்த இருண்ட சகாப்தத்தின் போது சாகும் வரை பட்டினிப் போடப்பட்ட அந்த இலட்சக்கணக்கான ஆட்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? அவர்களுடைய மரணம்தானே அவர்களுக்கு கடைசி முடிவா, அல்லது அல்லது அவர்கள் மறுபடியும் வாழ்வார்களா?
எமது தொடக்கத் தொடர் கட்டுரைகள் இந்தக் கேள்விகளைச் சிந்திக்கும்.