பக்கம் இரண்டு
சிருஷ்டிப்பிலுள்ள அழகும், பல்சுவையும், திட்ட அமைப்பும், புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகர் ஒருவர் இருக்க வேண்டும் என்று நம்புவதற்கு அநேகரை வழிநடத்தியிருக்கிறது. என்றாலும் மற்ற அநேகருக்கு உலகில் துன்பங்களும் தீமையும் இருப்பதுதானே கடவுளை நம்புவதற்கு மிகப்பெரிய இடறல் கல்லாக இருக்கிறது. ‘கடவுள் அன்பாக’ இருப்பாரேயானால், நல்ல ஆட்களுக்கு ஏன் அநேக கெட்டக் காரியங்கள் நேரிடுவதை அவர் அனுமதிக்கிறார்? கடவுள் தீமையை அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா? சமீப எதிர்காலத்தில் தீமை முடிவுக்கு வரும் என்று நம்புவதற்கு காரணமிருக்கிறதா?