குள்ளநரிகளின் குழிகளும் பறவைகளின் கூடுகளும்
குள்ளநரிகளுக்குக் குழிகளும் பறவைகளுக்குக் கூடுகளும் இருந்தாலும் தனக்கு நிரந்தரமான ஒரு வீடு இல்லை என்று இயேசு சொன்னார். இங்கே படத்தில் காட்டப்பட்டிருக்கும் குள்ளநரிகள் (வல்பெஸ் வல்பெஸ்) மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றன. அவை ஆஸ்திரேலியாவுக்கும் கொண்டு போகப்பட்டிருக்கின்றன. குள்ளநரிகள் பொதுவாக நிலத்தில் குழி பறித்து வாழ்கின்றன. சிலசமயங்களில் இயற்கையான பாறை இடுக்குகளிலோ, வேறொரு விலங்கு விட்டுச்சென்ற அல்லது வேறொரு விலங்கிடமிருந்து பறித்துக்கொண்ட பொந்துகளிலோ வாழ்கின்றன. இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள குருவி [Cetti’s Warbler (Cettia cetti)], இஸ்ரவேலில் ஏதோவொரு பருவத்தில் காணப்படும் கிட்டத்தட்ட 470 வகையான குருவிகளில் ஒன்று. பொதுவாக, பறவைகளின் கூடுகள் வித்தியாசப்படுகின்றன. அவை மரங்களின் மேலும், மரப் பொந்துகளிலும், செங்குத்தான பாறைகளிலும் கூடு கட்டுகின்றன. குச்சிகள், இலைகள், கடற்பாசிகள், கம்பளி, வைக்கோல், பாசி, இறகுகள் ஆகியவற்றால் அவற்றைக் கட்டுகின்றன. இஸ்ரவேலில் உள்ள வித்தியாசப்பட்ட இயற்கை அமைப்புகள், அதாவது குளிரான மலை உச்சிகளோ சூடான பெரிய பள்ளத்தாக்குகளோ, வறண்ட பாலைவனங்களோ கடற்கரையோர சமவெளிகளோ, எல்லா பகுதிகளுமே பறவைகளைக் கவரும் இடங்களாக இருக்கின்றன. மத்தியதரைக் கடலின் தென்கிழக்கு மூலைக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் இந்த எல்லா இடங்களிலும் அவை நிரந்தரமாக வாழ்கின்றன அல்லது அந்தப் பகுதி முழுவதும் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
நன்றி:
Dorit Bar-Zakay/Moment Open/Getty Images; © DEA/L ANDENA/age fotostock
சம்பந்தப்பட்ட வசனங்கள்: